search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கல் நாட்டு விழா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
    • பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரை.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (20-ந் தேதி) ஜம்மு செல்கிறார். அங்கு காலை 11-30 மணியளவில், ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சுகாதாரம், கல்வி, ரெயில், சாலை, விமானப்போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பலதுறைகளுடன் தொடர்புடைய திட்டப்பணிகள் இதில் அடங்கும்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

    மேலும், விக்சித் பாரத் விக்சித் ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார்.

    • நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கே.ஜே.நகரில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் தாமோதரன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதில் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், திட்ட இயக்குனர் பாஸ்கரன், மேலும் எம்.கே.டி.சரவணன் 9-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் ஜினோ, அவைத்தலைவர் கணேசன், இளைஞரணி நிர்வாகிகள் பிரபு, ரவி பங்கேற்றனர்.

    • ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ஆற்காடு நகராட்சி தேவி நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதார வளாகம் கட்டிடம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டித்தை திறந்து வைத்தார்.

    இதில் நகர மன்ற துணை தலைவர் பவளகொடி சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் முனவர்பாஷா, அணு அருண், ராஜலட்சுமி துரை, தொழிலதிபர் ஆர்.எஸ்.சேகர், ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபிநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பின்னாவரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேல் கலந்துகொண்டு, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    சேந்தமங்கலம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனியில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார். மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் நடக்கும் இந்த பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி விருதுநகர் ரெயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் முதல்கட்டமாக ரூ. 7.73 கோடியில் 2-ம் நுழைவு வாயில், 2-ம் நுழைவு வாயிலில் புதிய ரயில் நிலையக் கட்டடம், அணுகு சாலைகள், சுற்றுச்சுவர் புனரமைப்பு, வேலிச் சுவர்கள் புனர மைப்பு, ரெயில் நிலைய வளாகத்தை அழகு படுத்துதல், உட்புறச் சீரமைப்பு, பயணிகள் தொடர்பு கொள்ளும் பகுதி, மேம்படுத்தப்பட்ட குடிநீர்வசதி, அறிவிப்பு பலகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலைய அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா விருதுநகர் ரெயில் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன், மாணிக்கம் தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. விருதுநகர் நகர் மன்ற தலைவர் மாதவன், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இந்த விழா பாரம்பரிய பண்பாட்டை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சியோடு தொடங்கியது.நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு " இந்திய ெரயில்வேயின் ஆகச்சிறந்த முன்னேற்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை,ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் கீழநீலிதநல்லூர் முதல் மருதன்கிணறு வரை செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பாலம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ஊராட்சிமன்ற தலைவர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், முத்தரசு, மாரியப்பன், சுவாமிதாஸ், பாபு, பொறியாளர் அணி மாதவன், இளைஞர் அணி ரமேஷ், ஒப்பந்ததாரர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், கீழடியில் நிழற் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்காக மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வைத்தீஸ்வரி ஆறுமுகம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லா கான், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுப்பையா, ராமு, தி.மு.க. கிழக்கு ஒன் றியச் செயலர் கடம்பசாமி, நகரச் செயலர் நாகூர்கனி, நிர்வாகி கள் மகேந்திரன், இளங்கோவன், ரவி, கோபால், தேவதாஸ், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மந்தியூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது.
    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மந்தியூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் நூருல் ஹமீர், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராகவேந்திரன், ஊர் நாட்டாமைகள் சுந்தர், சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாராப்பூர் ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பலூர் கிராமத்தில் புதிய சமுதாய கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இப்பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பாகமாக ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனும், ஊராட்சி மன்ற தலைவரும் தங்கள் சொந்த நிதியில் இருந்து வழங்கி உள்ளனர். வாராப்பூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இவர் இப்பகுதி வளர்ச்சிக் காக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக நியாயவிலைக்கடை, ஆவின் பாலகம், குறுங்காடுகள் திட்டம், இயற்கை முறையில் உரம் தயாரித்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டுதல், குடிநீர் வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டினை இப்பகுதி கிராம மக்களுக்காக அரசு வழங்கும் உதவியோடு தன் சொந்த நிதியில் இருந்தும் வழங்கி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வருகிறார்.

    மேலும் இவர் எடுத்த பெரும் முயற்சியாக இக்கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி மதிப்பீட்டில் தனியார் கல்வி நிறுவனத்துக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நடுநிலை பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டது. இப்படி பதவியேற்ற 3 ஆண்டுகளில் அரசு வழங்கும் முத்தான பல திட்டங்களை தனது கிராம முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தி வரும் ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வலர்களும் ஊர் முக்கி யஸ்தர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி, வி.என். ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ரூ. 7 கோடி மதிப்பில் ராஜகோபுரத்துடன் கூடிய மறு புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள தென்தாமரைகு ளத்தில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பெரிய ம்மன் கோவில் உள்ளது. இங்கு பெரியம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், வெள்ளை மாரியம்மன், தோட்டுக்கா ரியம்மன், காவல் தெய்வமாக கருங்கடகார சாமி, எட்டு வீட்டு பிள்ளைமார் ஆகிய தெய்வங்கள் உள்ளன.

    இந்த கோவிலில் சுமார் ரூ. 7 கோடி மதிப்பில் ராஜகோபுரத்துடன் கூடிய மறு புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. கோவில் மூலஸ்தானம் மூன்றும், வெளிப்பிரகார மண்டபமும் கல் மண்ட பத்தால் அமைக்கப்ப டுகிறது. மறு புனரமைப்பு க்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோவில் வளாகத்தில் நடை பெற்றது.

    இதனையொட்டி அதிகா லை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்ப ட்டது. காலை 7.30 மணி அளவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு திருப்பணி குழு தலைவர் வழக்கறிஞர் தாமரை பாரதி தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக குழு தலைவர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் திரு ப்பணி குழு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதா கிரு ஷ்ணன், முன்னாள் தமிழக அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆவின் தலைவர் அசோகன், நாக ர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் முத்து ராமன், தி.மு.க. மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் சிவராஜ், தில்லை செல்வம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜன் மற்றும் அனைத்து ஊர் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அடிக்கல் நாட்டு விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார்.
    • நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 8.50 லட்சம் மதிப்பில் அலங்கார தளக்கல் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. உடையாம்புளி காமராஜர் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ், ஓடை மறிச்சான் ஊராட்சி தலைவர் பொன்ராஜ், துணை தலைவர் இசக்கிமுத்து, தி.மு.க. நிர்வாகிகள் சந்தன சுப்பிரமணியன், சந்தனமுத்து, இசக்கிமுத்து, மாசாணம் , முத்துக்குட்டி, அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×